
பிளாஷ்பேக் : மர்மயோகியாக மாறிய கரிகாலன்
எம்ஜிஆர் ஹாலிவுட் நடிகர்களான டக்ளஸ் பேர்பேங்க்ஸ் மற்றும் எரோல் ப்ளைன் ஆகியோரின் தீவிர ரசிகராக இருந்தார். அவர்கள் நடிப்பதை போன்று தானும் நடிக்க வேண்டும் என்று விரும்பினார். இதனால் இயக்குனர் ஏ.எஸ்.ஏ சாமியிடம் ஒரு கதை தயார் செய்யச் சொன்னார். மேரி கோரெல்லியின் "வெஞ்சன்ஸ்" நாவலிலிருந்தும், ராபின் ஹூட்டின் கதையிலிருந்தும் படத்தின் கரு உருவானது. அதனை தமிழ்நாட்டுக்கு ஏற்ப மாற்றி திரைக்கதை எழுதினார் சாமி.
இது போன்ற ஆக்ஷன் படங்களுக்கு பிரதாபன், பார்த்திபன், ராஜசிம்மன் என்பது மாதிரியான பெயர்கள் வைப்பார்கள். ஆனால் இவைகள் சமஸ்கிருத பெயர் என்பதால் எம்ஜிஆர் படத்திற்கு "கரிகாலன்" என்று பெயர் வைத்தார். முதலில் அப்படியே விளம்பரமும் செய்யப்பட்டது. படத்தின் தலைப்பை பார்த்த ரசிகர்களும், பொதுமக்களும் இது சோழ மன்னன் கரிகாலனின் வரலாற்று கதை என்று கருதினார்கள். இதை புரிந்து கொண்ட எம்ஜிஆர், பின்னர் படத்திற்கு "மர்மயோகி" என்று பெயர் வைத்தார். தமிழ் சினிமா வரலாற்றில் முதல் ஏ சான்றிதழ் பெற்ற படமும் இது ஆகும்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!