
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை
ஜன 26, 2022
Advertisement
பிரபாஸின் சாஹோ படத்தில் நடித்தவர் பாலிவுட் நடிகை எல்வின் சர்மா. இவர் தன்னுடைய சமூகவலைதளத்தில் தனது இரண்டு மாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இந்த புகைப்படத்தை சிலர் ட்ரோல் செய்து வருகிறார்கள். இதுகுறித்து தான் அளித்த ஒரு பேட்டியில் எல்வின் சர்மா கூறுகையில், தாய்ப்பால் கொடுப்பது போன்ற புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் எனக்கு வலிமை கிடைக்கிறது. நான் அதை அழகாக பார்க்கிறேன். அதோடு தாய்ப்பால் என்பது ஆரோக்கியமான விசயங்களில் ஒன்று. முக்கியமாக பெண்களுக்கு மார்பகம் இருப்பது தாய்பால் கொடுப்பதற்காகத்தான். அதைக் சொல்வதற்கும், அது குறித்த புகைப்படங்களை பதிவு செய்வதற்கும் எதற்காக வெட்கப்பட வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அவரது இந்த பதிலுக்கு சோசியல் மீடியாவில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது,
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!