
இரண்டாம் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், சாய் பல்லவி
நவ 01, 2024
Advertisement
நடிகர் துல்கர் சல்மான் மலையாள சினிமாவை கடந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் அவர் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் வெற்றி பெற்றது. தொடர்ந்து அவர் தெலுங்கில் நடித்து வெளிவந்த மகாநடி, சீதாராமம், லக்கி பாஸ்கர் ஆகிய படங்களும் வெற்றி பெற்றுள்ளது.
இதனால் இவரை வைத்து தெலுங்கில் படங்களை உருவாக்க தெலுங்கு பட நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றனர். தற்போது புதிதாக ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளார் துல்கர் சல்மான். இதனை கல்கி படத்தை தயாரித்த வைஜயந்தி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதற்கு " ஆகாசம் லோ ஒக்க தாரா" என தலைப்பு வைத்துள்ளனர். மேலும் இதில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக சாய் பல்லவி இணைந்து நடிக்கவுள்ளார். இவர்கள் ஏற்கனவே "காளி" என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் இவரை வைத்து தெலுங்கில் படங்களை உருவாக்க தெலுங்கு பட நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றனர். தற்போது புதிதாக ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளார் துல்கர் சல்மான். இதனை கல்கி படத்தை தயாரித்த வைஜயந்தி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதற்கு " ஆகாசம் லோ ஒக்க தாரா" என தலைப்பு வைத்துள்ளனர். மேலும் இதில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக சாய் பல்லவி இணைந்து நடிக்கவுள்ளார். இவர்கள் ஏற்கனவே "காளி" என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!