
திரிஷ்யம் 3 உறுதி : தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இந்த நிலையில் இந்த படத்தின் மூன்றாம் பாகம் எப்போது உருவாகும் என ரசிகர்கள் சோசியல் மீடியாவில் கேள்வி எழுப்பி வந்தனர். இயக்குனர் ஜீத்து ஜோசப்பும் இதற்கான ஸ்கிரிப்ட் தயாரானால் மூன்றாம் பாகம் ஆரம்பிக்க வாய்ப்பு இருக்கிறது என்று சூசகமாக சொல்லியிருந்தார். இந்த நிலையில் இந்த இரண்டு பாகங்களை தயாரித்த தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் சமீபத்திய விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்டபோது திரிஷ்யம் 3 படம் நிச்சயமாக உருவாக இருக்கிறது. அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது” என்று அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துள்ளார். மூன்றாம் பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கும் ரசிகர்கள் இந்த அறிவிப்பால் உற்சாகமாகி உள்ளனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!