
இயக்குனர் சுகுமாருக்கு எல்லா விஷயமும் தெரியும் : ஜானி மாஸ்டர் வாக்குமூலம்
இதுகுறித்து போலீசார் தரப்பிலிருந்து வெளியான சில தகவல்களின்படி ஜானி மாஸ்டர் கூறும் போது, “சம்பந்தப்பட்ட அந்தப் பெண் தானாகவே என்னிடம் வந்து வாய்ப்பு கேட்டார். அவரது திறமையை அறிந்து என்னிடம் நடன உதவி இயக்குனராக சேர்த்துக் கொண்டேன். ஒரு கட்டத்தில் அவர் என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு டார்ச்சர் செய்யவும் மிரட்டவும் ஆரம்பித்தார். இந்த விஷயம் குறித்து புஷ்பா படப்பிடிப்பில் இருந்த சமயத்திலேயே இயக்குனர் சுகுமாரிடம் நான் கூறியுள்ளேன். அவரும் ஒரு முறை அந்த பெண்ணை அழைத்து அறிவுரை கூறினார். ஆனாலும் அந்தப் பெண்ணிடம் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இந்த குற்றச்சாட்டு மற்றும் புகாரின் பின்னணியில் எனக்கு எதிராக ஒரு சதி நடந்து இருக்கிறது. என்னுடைய வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் இது போன்ற ஒரு செயலில் இறங்கியுள்ளார்கள்” என்று கூறியுள்ளாராம்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!