
ஒமைக்ரான் பாதிப்பில் மோகன்லால் பட இயக்குனர்
இந்தநிலையில் மோகன்லாலை வைத்து பெருச்சாழி, அர்ஜுன் நடித்த நிபுணன், பிரசன்னா - சினேகாவின் காதல் திருமணத்திற்கு வழிவகுத்த அச்சமுண்டு அச்சமுண்டு ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் அருண் வைத்தியநாதன் ஒமைக்ரானால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் சற்றே நகைச்சுவையுடன், “எனது வீட்டுக்கு ஒமைக்ரான் என்கிற விருந்தாளி வந்துள்ளார். இப்போதைக்கு அவர் என்னை பெரிதாக துன்புறுத்தவில்லை.. அதனால் நண்பர்கள் யாரும் பயப்பட வேண்டாம்.. கடந்த சில நாட்களுக்கு முன்பு வாரணாசி மற்றும் கயாவில் கும்பமேளாவில் கலந்துகொண்டு காட்சிகளை படமாக்கினோம். 28 நாட்கள் கிட்டத்தட்ட 150 பேர் என்னுடன் செட்டில் பணியாற்றினார்கள்.. ஆனால் அமெரிக்காவுக்கு வந்தபோது எனக்கு ஒமைக்ரான் பாதிப்பு என ரிசல்ட் வந்துள்ளது. கொரோனா என்பது லாஜிக்கே இல்லாத மசாலா படம் போன்றது” என கூறியுள்ளார் அருண் வைத்தியநாதன்.
இவர் தற்போது வெங்கட்பிரபு, சினேகா, யோகிபாபு ஆகியோரை வைத்து ஷாட் பூட் 3 என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்தபடம் குழந்தைகளுக்கான படமாக உருவாகி வருகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!