
வாழ்த்து பெற்ற பிரக்ஞானந்தாவுக்கு ரஜினி கொடுத்த பரிசு
ஜூலை 23, 2022
செஸ் வீரர் பிரக்ஞானந்தா கடந்த 2018ம் ஆண்டு கிரான்ட் மாஸ்டர் பட்டம் பெற்றார். அதன் பிறகு கடந்த பிப்ரவரி, மே மாதங்கள் நடைபெற்ற சர்வதேச அளவிலான செஸ் தொடரில் உலக சாம்பியனான மேக்னஸ் கார்லிசனை வீழ்த்தி சாதனை படைத்தார். ஜூலை 28ம் தேதி மாமல்லபுரத்தில் தொடங்க உள்ள செஸ் ஒலிம்பியா தொடரிலும் இந்தியா சார்பில் பங்கேற்கவுள்ளார்.
இந்த நிலையில் இன்று தனது குடும்பத்தாருடன் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்று இருக்கிறார் பிரக்ஞானந்தா. அப்போது செஸ் ஒலிம்பியா தொடரிலும் அவர் வெற்றி பெற வாழ்த்திய ரஜினிகாந்த், ராகவேந்திரரின் புகைப்படம் ஒன்றை பரிசாக வழங்கியிருக்கிறார். அதையடுத்து ரஜினிக்கு பிரக்ஞானந்தாவும் செஸ் போர்டு ஒன்றை பரிசாக வழங்கி இருக்கிறார்.
இதுகுறித்து, "மறக்க முடியாத நாள் இன்று. ரஜினி அங்கிளை எனது குடும்பத்தினருடன் சென்று சந்தித்தேன். எவ்வளவோ உயரங்களை அடைந்த போதும் அவர் மிகவும் எளிமையாக இருப்பது என்னை ஈர்த்தது. மகிழ்ச்சி## என்று பதிவிட்டுள்ளார் பிரக்ஞானந்தா.
இந்த நிலையில் இன்று தனது குடும்பத்தாருடன் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்று இருக்கிறார் பிரக்ஞானந்தா. அப்போது செஸ் ஒலிம்பியா தொடரிலும் அவர் வெற்றி பெற வாழ்த்திய ரஜினிகாந்த், ராகவேந்திரரின் புகைப்படம் ஒன்றை பரிசாக வழங்கியிருக்கிறார். அதையடுத்து ரஜினிக்கு பிரக்ஞானந்தாவும் செஸ் போர்டு ஒன்றை பரிசாக வழங்கி இருக்கிறார்.
இதுகுறித்து, "மறக்க முடியாத நாள் இன்று. ரஜினி அங்கிளை எனது குடும்பத்தினருடன் சென்று சந்தித்தேன். எவ்வளவோ உயரங்களை அடைந்த போதும் அவர் மிகவும் எளிமையாக இருப்பது என்னை ஈர்த்தது. மகிழ்ச்சி## என்று பதிவிட்டுள்ளார் பிரக்ஞானந்தா.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!