
பரத் நடித்துள்ள வெப் தொடர் வெளியானது
குற்றம், மர்மம் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான நாடகம் ஆகியவற்றை ஒன்றிணைக்கும் 6 அத்தியாயங்களைக் கொண்ட புலனாய்வு திரில்லர் தொடர் இது. விபத்து என்று புறக்கணிக்கப்பட்ட தனது தம்பியின் மரணத்தை, காவல்துறை அதிகாரி ஜெய் ராம் (பரத் ) விசாரித்து, தொடர்ச்சியான மர்ம மரணங்களுடன் தொடர்புடைய ஒரு ஆழமான குற்ற வலையமைப்பை வெளிக்கொணர்வதை இந்தக் கதை விவரிக்கிறது.
இது குறித்து பரத் கூறும்போது “பஞ்சநாமாவின் க்ரைம் -த்ரில்லர் திரைக்கதை மற்றும் அதன்மீதான ஈர்ப்பு காரணமாக தேர்ந்தெடுத்தேன். தெலுங்கு ரசிகர்களுடன் மீண்டும் இணைவதற்கான ஒரு வாய்ப்பாகவும் இதைக் கண்டேன். எனது ஜெய் ராம் கதாபாத்திரம், நான் இதற்கு முன் நடித்த காவல்துறை கதாபாத்திரங்களிலிருந்து வேறுபட்டது” என்றார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!