
ஹீரோவாகி விட்டதால் பொறுப்பு கூடிவிட்டது: சூரி
தற்போது படக்குழுவினர் புரமோஷன் டூர் கிளம்பி உள்ளனர். அந்த வகையில் நேற்று கோவை சென்றனர். அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்த சூரி கூறியதாவது : விடுதலை படத்திற்கு பிறகு ரசிகர்கள் என்னை காமெடியன் என்பதை தாண்டி வேறொருவனாக பார்க்க தொடங்கி விட்டார்கள். இந்த படத்திலும் அப்படித்தான். விடுதலை படத்தில் கஷ்டப்பட்டு நடித்ததை போன்று இந்த படத்திலும் கஷ்டப்பட்டு நடித்திருக்கிறேன். அதற்கான பலன் கண்டிப்பாக கிடைக்கும்.
தற்போது தொடர்ந்து கதை நாயகனாக நடிக்கத்தான் வாய்ப்புகள் வருகிறது. காமெடியன் வாய்ப்புகள் வருவதில்லை. காமெடி கதாபாத்திரங்களை நடிக்கும்பொழுது அதற்கான காட்சிகளை மட்டும் நடித்துவிட்டு சென்று விடுவேன். ஆனால் நாயகனாக நடிப்பதால் பொறுப்பு கூடி உள்ளது. கதாநாயகனாக வெற்றிமாறன் அளித்த இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்கு நிறைய உழைக்கிறேன். சினிமாவில் எந்த இடமும் காலியாக இருக்காது. அந்தந்த இடத்திற்கு ஆட்கள் வந்து கொண்டே இருப்பார்கள். சினிமா அந்த இடத்திற்கான ஆளை தேர்வு செய்து விடும். என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!