
எந்த படத்தின் காப்பியும் அல்ல : பீஸ்ட் குற்றச்சாட்டுக்கு இயக்குனர் நெல்சன் பதில்
ஏப் 08, 2022
Advertisement
நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடித்துள்ள பீஸ்ட் படம் வருகிற 13ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் வெளியாகிறது. இந்த படம் யோகி பாபு நடித்த கூர்கா மற்றும் சில ஹாலிவுட் படங்களின் சாயல் இருக்கிறது. முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கிறது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதுபற்றி நெல்சன் அளித்துள்ள பதில் வருமாறு: பொதுமக்கள் அதிகம் நடமாடும் ஒரு ஷாப்பிங் மாலை ஹைஜாக் செய்யும் கதை ஒன்றும் சினிமாவுக்கு புதிதில்லை. பல படங்கள் வந்திருக்கிறது. ஆனால் சொல்லப்படும் விதத்திலும், காட்சிகள் உருவாக்கத்திலும் அவை வேறுபடும். இந்த மாதிரியான கதைகளில் சில காட்சிகள் ஒரே மாதிரி வருவதும் தவிர்க்க முடியாது. நானும் கூர்கா படத்தை பார்த்தேன். அதற்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. மணி ஹெய்ஸ்ட் தொடருக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை.
பொதுவாக என்னுடைய டிரைலர்கள் ஒரு மாதிரியாகவும், படங்கள் வேறு மாதிரியாகவும் இருக்கும், டிரைலரில் வரும் காட்சிகளை வைத்து படத்தை தீர்மானிக்க முடியாது. யார் மனதையும் புண்படுத்தும் காட்சிகள் படத்தில் இல்லை. படம் பார்க்கும்போது அதனை உணர்வார்கள்.
விஜய் என்னை அழைத்து எனக்கு ஒரு கதை பண்ணுங்கள் என்று கூறிய பிறகு அவருக்காகவே உருவாக்கப்பட்ட கதை தான் இது. ஆனாலும் அவரது முந்தைய படங்களில் இருந்து வேறுபட்டதாக இருக்கும். அவரது ரசிகர்களை திருப்பதி படுத்துவதாகவும் இருக்கும். எனது படங்கள் பொழுதுபோக்கு கமர்ஷியல் படங்களாக இருக்கும். இதுவும் அந்த மாதிரியா ஒரு படம். என்றார்.
இதுபற்றி நெல்சன் அளித்துள்ள பதில் வருமாறு: பொதுமக்கள் அதிகம் நடமாடும் ஒரு ஷாப்பிங் மாலை ஹைஜாக் செய்யும் கதை ஒன்றும் சினிமாவுக்கு புதிதில்லை. பல படங்கள் வந்திருக்கிறது. ஆனால் சொல்லப்படும் விதத்திலும், காட்சிகள் உருவாக்கத்திலும் அவை வேறுபடும். இந்த மாதிரியான கதைகளில் சில காட்சிகள் ஒரே மாதிரி வருவதும் தவிர்க்க முடியாது. நானும் கூர்கா படத்தை பார்த்தேன். அதற்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. மணி ஹெய்ஸ்ட் தொடருக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை.
பொதுவாக என்னுடைய டிரைலர்கள் ஒரு மாதிரியாகவும், படங்கள் வேறு மாதிரியாகவும் இருக்கும், டிரைலரில் வரும் காட்சிகளை வைத்து படத்தை தீர்மானிக்க முடியாது. யார் மனதையும் புண்படுத்தும் காட்சிகள் படத்தில் இல்லை. படம் பார்க்கும்போது அதனை உணர்வார்கள்.
விஜய் என்னை அழைத்து எனக்கு ஒரு கதை பண்ணுங்கள் என்று கூறிய பிறகு அவருக்காகவே உருவாக்கப்பட்ட கதை தான் இது. ஆனாலும் அவரது முந்தைய படங்களில் இருந்து வேறுபட்டதாக இருக்கும். அவரது ரசிகர்களை திருப்பதி படுத்துவதாகவும் இருக்கும். எனது படங்கள் பொழுதுபோக்கு கமர்ஷியல் படங்களாக இருக்கும். இதுவும் அந்த மாதிரியா ஒரு படம். என்றார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!