
தடை நீங்கியது : டிசம்பர் 12ல் அகண்டா 2 ரிலீஸ் அறிவிப்பு
இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான 14 ரீல்ஸ் பிளஸ் நிறுவனத்திற்கும், ஈராஸ் நிறுவனத்திற்கும் இடையேயான பணப் பரிமாற்ற பாக்கித் தொகை காரணமாக ஈராஸ் நிறுவனம் நீதிமன்றத் தடை உத்தரவை வாங்கியது. தெலுங்கின் சீனியர் டாப் ஹீரோவான பாலகிருஷ்ணா படம் நீதிமன்ற உத்தரவால் வெளியாகாமல் போனது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக பேச்சு வார்த்தைகள் ஆரம்பமானாலும் அடுத்த நாளே படத்தை வெளியிட முயற்சித்தும் முடியவில்லை.
அதன்பின் இரண்டு நிறுவனங்களும் பேசி ஒரு உடன்பாட்டுக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது. எதிர்பார்த்ததைப் போலவே நீதிமன்றத்தை அணுகி தடை உத்தரவு நீக்கத்தைப் பெற்றதாக டோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று இரவு 10 மணிக்கு மேல் டிசம்பர் 12ல் படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. டிசம்பர் 11ம் தேதி படத்தின் பிரிமியர் காட்சிகள் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!