
பாக்ஸிங்கை விட ரத்த பூமி : ஆர்யாவின் சுவாரசியப் பதிவு
குறிப்பாக பசுபதியை சைக்கிளில் ஏற்றிக் கொண்டு ஆர்யா செல்லும் காட்சி வெவ்வேறு விதமான மீம்ஸ்களாக வலம் வந்தது, தற்போதும் வலம் வந்து கொண்டிருக்கிறது. அந்த ஒரே ஒரு புகைப்படத்தை வைத்துக் கொண்டு விண்வெளியைத் தவிர உலகமெங்கும் ஆர்யாவையும், பசுபதியையும் உலகம் சுற்ற வைத்தார்கள் மீம்ஸ் கிரியேட்டர்கள்.
பசுபதியின் பெயரிலேயே சில பல பொய்யான டுவிட்டர் கணக்குகள் இருக்க, இன்று பசுபதியின் உண்மையான டுவிட்டர் கணக்கைப் பகிர்ந்து, “வாத்தியாரே இதான் டுவிட்டர் வாத்தியாரே, பாக்ஸிங்கை விட ரத்த பூமி. உன்னோட பேருல இங்க நெறைய பேரு இருக்காங்கன்னு தெரிஞ்சதும், ஒரிஜனல் நான்தான்டான்னு உள்ள வந்த பாத்தியா. உன் மனசே மனசுதான். வா வாத்தியாரே இந்த வேர்ல்டு உள்ள போலாம்,” என சுவாரசியமான பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
வாத்தியாரும், கபிலனும் இன்னும் சுற்றாத இடங்களையும் மீம்ஸ் கிரியேட்டர்கள் சுற்ற வைக்காமல் விட மாட்டார்கள் போலிருக்கிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!