
சாகச நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தயாராகும் அர்ஜூன்
ஜூன் 30, 2021
Advertisement
நடிகர் அர்ஜுனை பொறுத்தவரை கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு மேல் ஹீரோவாக நடித்தவர், கடந்த சில வருடங்களாக வில்லன், குணசித்திர நடிகர், இரண்டாவது ஹீரோ என புதிய பரிமாணத்தில் தனது இரண்டாவது இன்னிங்ஸை சிறப்பாக ஆடி வருகிறார். பெரும்பாலும் வித்தியாசமான முயற்சிகளை செய்து பார்ப்பதற்கு தயங்காதவர் அர்ஜுன். அந்த வகையில் சூர்யா, சரத்குமார், கமல் வரிசையில் டிவி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க தயாராகி வருகிறார் அர்ஜூன்.
விரைவில் ஜீ தமிழ் தொலைக்காட்சி தயாரிக்கவிருக்கும் சர்வைவர் என்கிற சாகச நிகழ்ச்சியை தான் தொகுத்து வழங்க இருக்கிறார் அர்ஜுன். இதற்கான படப்பிடிப்பு வரும் செப்டம்பரில் துவங்குகிறது. இந்த படப்பிடிப்புக்காக அல்லது இதன் புரோமோ படப்பிடிப்புக்காக அர்ஜுன் தென் ஆப்பிரிக்கா செல்ல இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. முன்னதாக இந்த நிகழ்ச்சியை நடிகர் சிம்பு தொகுத்து வழங்க போவதாக செய்திகள் வந்தன.
விரைவில் ஜீ தமிழ் தொலைக்காட்சி தயாரிக்கவிருக்கும் சர்வைவர் என்கிற சாகச நிகழ்ச்சியை தான் தொகுத்து வழங்க இருக்கிறார் அர்ஜுன். இதற்கான படப்பிடிப்பு வரும் செப்டம்பரில் துவங்குகிறது. இந்த படப்பிடிப்புக்காக அல்லது இதன் புரோமோ படப்பிடிப்புக்காக அர்ஜுன் தென் ஆப்பிரிக்கா செல்ல இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. முன்னதாக இந்த நிகழ்ச்சியை நடிகர் சிம்பு தொகுத்து வழங்க போவதாக செய்திகள் வந்தன.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!