
தெலுங்கு பேசும் தமிழ் பையன் நான் - அல்லு அர்ஜூன்
விழாவில் பேசிய அல்லு அர்ஜூன், ”தமிழ்நாட்டில் தான் பிறந்தேன். 20 வயது வரை தமிழ்நாட்டில் தான் வளர்ந்தேன். நல்ல படத்தோடு தமிழ்நாட்டுக்கு வரவேண்டும் என்பதற்காகவே இத்தனை ஆண்டுகளாக காத்திருந்தேன். நான் பேசும் தமிழ் தப்பாக இருந்தாலும், தமிழ் பேசுவது தான் அழகாக இருக்கும். புஷ்பா திரைப்படம் 4 படத்துக்கு சமம். இந்தப்படம் செம்மரக் கடத்தலின் பின்னணியில் நடக்கும் புஷ்பாவின் கதை, அவ்வளவு தான். இதில் அரசியல் எல்லாம் இல்லை. படம் நல்லா வரணும் என்று நினைத்து தான் நான் டப்பிங் பேசவில்லை. இந்தப்பட கேரக்டருக்கு மாறியது சவாலாக இருந்தது.
சாமி சாமி பாடல் வெற்றிக்கு தேவி ஸ்ரீ பிரசாத் தான் காரணம். பாடல் வெற்றி பெற்றதால் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறேன். தமிழ்நாட்டு மக்கள் புஷ்பா படத்தை பார்க்க வேண்டும் என்பதற்காக காத்திருந்தேன். தெலுங்கு பேசும் தமிழ் பையன் நான். தமிழில் படம் செய்ய வேண்டும், தமிழ் இயக்குநர்களிடம் கேளுங்கள் நான் நடிக்க ரெடி” என்றார்.
பின்னர் தமிழில் யார் நன்றாக டான்ஸ் ஆடுகிறார்கள்? என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, “கமல், விஜய், தனுஷ் அனைவரும் நன்றாக டான்ஸ் ஆடுகிறார்கள். சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படம் பிடித்திருந்தது. சிவகார்த்திகேயன் நன்றாக டான்ஸ் ஆடுகிறார். சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்துகள்” என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!