
சுயேட்சையாக களமிறங்கும் நடிகர் மயில்சாமி
மார் 15, 2021
Advertisement
தமிழகத்தில் தேர்தல் வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. வழக்கம் போலவே இம்முறைத் தேர்தலிலும் நடிகர், நடிகையர் பலர் போட்டியிட இருக்கின்றனர். இந்நிலையில் பிரபல காமெடி நடிகர் மயில்சாமி சென்னை விருகம்பாக்கத்தில் சுயேச்சையாக களமிறங்க முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எம்ஜிஆரின் தீவிர ரசிகரான மயில்சாமி, ஜெயலலிதா மரணம் அடையும் வரை அதிமுகவில் இருந்தார். பின்னர் அக்கட்சியில் இருந்து வெளியேறியவர் தற்போது சுயேட்சையாக போட்டியிட திட்டமிட்டுள்ளார்.
ஏற்கனவே சென்னை வெள்ளம், கொரோனா ஊரடங்கு போன்ற காலங்களில் தனது பகுதி மக்களுக்கு உணவு உட்பட பல்வேறு உதவிகளைச் செய்துள்ளார் மயில்சாமி. இதனால் அத்தொகுதியில் அவருக்கு கொஞ்சம் செல்வாக்கு உள்ளது. அதை கருத்தில் கொண்டே தேர்தலில் களமிறங்கி உள்ளார்.
எம்ஜிஆரின் தீவிர ரசிகரான மயில்சாமி, ஜெயலலிதா மரணம் அடையும் வரை அதிமுகவில் இருந்தார். பின்னர் அக்கட்சியில் இருந்து வெளியேறியவர் தற்போது சுயேட்சையாக போட்டியிட திட்டமிட்டுள்ளார்.
ஏற்கனவே சென்னை வெள்ளம், கொரோனா ஊரடங்கு போன்ற காலங்களில் தனது பகுதி மக்களுக்கு உணவு உட்பட பல்வேறு உதவிகளைச் செய்துள்ளார் மயில்சாமி. இதனால் அத்தொகுதியில் அவருக்கு கொஞ்சம் செல்வாக்கு உள்ளது. அதை கருத்தில் கொண்டே தேர்தலில் களமிறங்கி உள்ளார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!