
இரண்டாவது மனைவி உடன் பிரிவா.... நடிகர் பாலா கருத்து
அக் 22, 2022
Advertisement
தமிழில் அன்பு, காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்தவர் நடிகர் பாலா. இயக்குனர் சிவாவின் தம்பியான இவர் "வீரம்" படத்தில் அஜித்தின் தம்பிகளில் ஒருவராக நடித்திருந்தார். தொடர்ந்து மலையாள படங்களில் கவனம் செலுத்தி நடித்து வந்த இவர் கடந்த 2010ம் ஆண்டு பாடகியான அம்ருதா சுரேஷை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு அவந்திகா என்கிற பெண் குழந்தையும் உண்டு. கணவன் மனைவி இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 2௦16-ல் நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
இந்த நிலையில் சில வருடங்களாக தனிமையில் வாழ்ந்த பாலா கடந்த 2021 செப்டம்பரில் கேரளாவை சேர்ந்த டாக்டர் எலிசபெத் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்தார். இவர்கள் திருமணம் நடந்து முடிந்து ஒரு வருடமே ஆகியுள்ள நிலையில் தற்போது பாலா தனது மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்வதாக செய்திகள் வெளியாகின.
இதுபற்றி பாலா ஒரு வீடியோ வெளியிட்டு பின் அதை நீக்கிவிட்டார். அந்த வீடியோவில் அவர் பேசியதாவது : “நமது முதல் திருமணம் தோல்வியில் முடியும்போது அதுபற்றி பெரிதாக நினைக்கவில்லை. அதேசமயம் இரண்டாவது திருமணமும் தோல்வி என்றால் அதைப்பற்றி நினைக்க துவங்குகிறோம். உங்களில் பலர் நான் எலிசபெத்துடன் பேசக்கூடாது என வற்புறுத்துகிறீர்கள். இங்கே உங்களுக்கெல்லாம் ஒரு விஷயத்தை சொல்கிறேன். அவள் என்னைவிட சிறந்த நபர். அவள் ஒரு டாக்டர். அவள் மன அமைதிக்கு கொஞ்சம் இடம் கொடுங்கள். அவள் ஒரு பெண்.. நான் எல்லாவற்றையும் மாற்றுவேன்.. எனது வாழ்க்கையில் இது வலி மிகுந்த நாட்கள்.. நான் என்னைப் பற்றி பேசுவதற்கு தகுதி வாய்ந்த நபர் தான். ஆனால் இப்போது அதை நான் செய்யப்போவதில்லை. தயவுசெய்து யாரும் என்னை தூண்டிவிட வேண்டாம்” என்று கூறியுள்ளார் பாலா.
இந்த நிலையில் சில வருடங்களாக தனிமையில் வாழ்ந்த பாலா கடந்த 2021 செப்டம்பரில் கேரளாவை சேர்ந்த டாக்டர் எலிசபெத் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்தார். இவர்கள் திருமணம் நடந்து முடிந்து ஒரு வருடமே ஆகியுள்ள நிலையில் தற்போது பாலா தனது மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்வதாக செய்திகள் வெளியாகின.
இதுபற்றி பாலா ஒரு வீடியோ வெளியிட்டு பின் அதை நீக்கிவிட்டார். அந்த வீடியோவில் அவர் பேசியதாவது : “நமது முதல் திருமணம் தோல்வியில் முடியும்போது அதுபற்றி பெரிதாக நினைக்கவில்லை. அதேசமயம் இரண்டாவது திருமணமும் தோல்வி என்றால் அதைப்பற்றி நினைக்க துவங்குகிறோம். உங்களில் பலர் நான் எலிசபெத்துடன் பேசக்கூடாது என வற்புறுத்துகிறீர்கள். இங்கே உங்களுக்கெல்லாம் ஒரு விஷயத்தை சொல்கிறேன். அவள் என்னைவிட சிறந்த நபர். அவள் ஒரு டாக்டர். அவள் மன அமைதிக்கு கொஞ்சம் இடம் கொடுங்கள். அவள் ஒரு பெண்.. நான் எல்லாவற்றையும் மாற்றுவேன்.. எனது வாழ்க்கையில் இது வலி மிகுந்த நாட்கள்.. நான் என்னைப் பற்றி பேசுவதற்கு தகுதி வாய்ந்த நபர் தான். ஆனால் இப்போது அதை நான் செய்யப்போவதில்லை. தயவுசெய்து யாரும் என்னை தூண்டிவிட வேண்டாம்” என்று கூறியுள்ளார் பாலா.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!