
பத்து நாள் ராஜாவாக சதீஷ்
புதிய வருடப்பிறப்பில் இந்த படத்திற்கு "பத்து நாள் ராஜா" என தலைப்பு வைத்துள்ளதாக முதல் பார்வை போஸ்டருடன் அறிவித்துள்ளனர். சதீஷ் சட்டையில் ஆங்காங்கே ரத்த கரைகள் படிந்திருக்க ஒரு கையில் காய்கறி பை மற்றொரு கையில் சாப்பாடு பை என கண்ணாடி போட்டுக் கொண்டு புதிய தோற்றத்தில் உள்ளார்.
இதில் கதாநாயகியாக மலையாள நடிகை சரண்யா நடிக்கிறார். சரவணன், சிங்கம் புலி, பிளாக் பாண்டி, தங்கதுரை உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசையமைக்கிறார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!