
வாரிசு தயாரிப்பாளர், இயக்குனருடன் சல்மான் புதிய கூட்டணி : ஏப்ரலில் படப்பிடிப்பு ஆரம்பம்
தற்போது "மாத்ருபூமி" என்ற ஹிந்திப் படத்தில் நடித்து வருகிறார் சல்மான். இந்தப் படத்திற்குப் பிறகு அடுத்து அவர் நடிக்க உள்ள புதிய படத்தை விஜய் நடித்த "வாரிசு" படத்தை இயக்கிய தில் ராஜு தயாரிக்க, அந்தப் படத்தின் இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்குகிறார். இது குறித்த அறிவிப்புகளை மூவருமே அடுத்தடுத்து நேற்று வெளியிட்டார்கள். ஏப்ரல் மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.
வம்சி பைடிபள்ளி குடும்பப் பாங்கான படங்களை எடுத்து பெயர் வாங்கியவர். சல்மான் கான் நடிக்க உள்ள இந்தப் படம் குடும்பம் பிளஸ் ஆக்ஷன் கலந்த படமாக இருக்கும் என்கிறார்கள்.
தென்னிந்திய இயக்குனர்களின் இயக்கத்தில் நடிப்பதை விரும்புபவர் சல்மான் கான். அவர்கள் சில சமயங்களில் தோல்விகளைக் கொடுத்தாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் அவர்கள் மீது மீண்டும் நம்பிக்கை வைத்து அடுத்து படத்திலும் நடிக்க உள்ளார்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!