
100 ஷோலேவுக்கு சமம் : துரந்தர் 2 படம் பார்த்த ராம்கோபால் வர்மா சிலாகிப்பு
அதில், “துரந்தர் 2 திரைப்படம் ஷோலே திரைப்படத்தை விட 100 மடங்கு பிரம்மாண்டமாக இருக்கிறது. முகல் இ ஆசம் படம் தொடங்கி இப்போது வந்த மிகச்சிறந்த படங்கள் அனைத்தையும் இது மிஞ்சும். இனி அந்த படங்களை எல்லாம் துரந்தர் 2 குழுவுடன் ஒப்பிடும் போது தொலைக்காட்சி தொடர்களைப் போல இருக்கும். சொல்லப்போனால் இது நியூ சினிமாட்டிக் வரிசையில் புதிய பிறப்பு என்றும் இதற்கு முன் இருந்த அனைத்தின் இரக்கமற்ற அழிவும் என்றும் கூட சொல்லலாம்.
இயக்குனர் என்ற வார்த்தையில் உச்சரிப்பே இனி ஆதித்யா தர் என்கிற பெயரில் இருந்து தான் தொடங்க போகிறது. ஹாலிவுட் இயக்குனர்களான ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் மற்றும் கிறிஸ்டோபர் நோலன் கூட தாங்கள் செய்து கொண்டிருக்கும் வேலைகள் அனைத்தையும் விட்டுவிட்டு துரந்தர் 2 படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்ப்பது தான் விவேகமானதாகவும் புத்திசாலித்தனமாகவும் இருக்கும்” என்று கூறியுள்ளார்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!