
லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை
இந்த சிலையின் திறப்பு விழாவில் ஷாருக்கான், கஜோல் ஆகிய இருவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதுகுறித்த புகைப்படத்தை இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ள ஷாருக்கான் ஒரு பதிவும் போட்டுள்ளார்.
அதில், ‛‛தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே படத்தின் 30வது நிறைவு ஆண்டை கொண்டாடும் வகையில் இன்று லண்டனில் லெஸ்டர் சதுக்கத்தில் ராஜ் - சிம்ரனின் வெங்கல சிலையை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். லெஸ்டர் சதுக்கத்தில் காட்சிகள் பாதைகள் சிலையுடன் கவுரவிக்கப்படும் முதல் இந்திய திரைப்படம் இது என்பதில் நம்ப முடியாத அளவிற்கு மகிழ்ச்சி. இதை சாத்தியமாக்கிய இங்கிலாந்தில் உள்ள அனைவருக்கும் மிக்க நன்றி. நீங்கள் லண்டனில் இருக்கும்போது ராஜ் அண்ட் சிம்ரனை சந்திக்க வாருங்கள். தில்வாலே துல்ஹனியா உடன் நீங்கள் இன்னும் பல நினைவுகளை உருவாக்குவதை நாங்கள் காண விரும்புகிறோம்"" என்று குறிப்பிட்டுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!