
ஏர் இந்தியா விமான சேவை மீது சிதார் இசைக் கலைஞர் ரவிசங்கரின் மகள் குற்றச்சாட்டு
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கிட்டத்தட்ட 1000 விமான பயணங்களில் என்னுடைய உற்ற நண்பனாக பயணித்த இந்த சிதார் கருவியை ஏர் இந்தியா விமான நிறுவனத்தினர் கவனமின்மையுடன் கையாண்டதால் இது உடைந்து சேதம் அடைந்துள்ளது. இத்தனைக்கும் இதன் பாதுகாப்புக்காக சிறப்பு கட்டணம் வேறு செலுத்தி இருந்தேன். இத்தனை வருடங்களில் ஏர் இந்தியாவில் நான் பயணிப்பது இதுதான் முதல் முறை. இந்த முதல் முறையிலேயே இப்படி ஒரு மோசமான அனுபவத்தை எனக்கு ஏர் இந்தியா கொடுத்து விட்டது” இன்று தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.
திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் அனோஷ்கா சங்கருக்கு ஆதரவாக ஏர் இந்தியா நிறுவனத்தின் சேவைக்கு எதிராக தங்களது கடுமையான விமர்சனங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!