
பின்வாங்கிய ராஜ்குமார் ஹிரானி, அமீர் கான் : அப்போ ராஜமவுலிக்கு வெற்றியா?
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமீர்கான், ராஜ்குமார் ஹிரானி கூட்டணியில் தாதா சாகேப் பால்கே படம் உருவாகிறது என தகவல் வெளியானது. அதேசமயத்தில் ராஜமவுலி மற்றும் அவரது மகன் கார்த்திகேயா இணைந்து "தாதா சாகேப் பால்கே" வாழ்க்கையை பின்னணியாக கொண்டு படம் ஒன்றை உருவாக்க திட்டமிட்டனர். இந்தக் கதையில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்க சம்மதம் தெரிவித்திருந்தார். இது தொடர்பான செய்தியும் வெளியானது.
இதைத்தொடர்ந்து ராஜ்குமார் ஹிரானி, அமீர்கான் இணைந்து தாதா சாகேப் பால்கேவின் வாழ்க்கை படத்தை அக்டோபரில் துவங்குவதாக அறிவிப்பு வெளியானது. இதற்கான பணிகள் நடந்து வந்தன. ஆனால் திரைக்கதை அவர்களுக்கு திருப்தி அளிக்கும் விதத்தில் அமையவில்லையாம். இதனால் இந்த படத்தை கைவிட ராஜ்குமார் ஹிரானி, அமீர் கான் முடிவு செய்துள்ளதாக பாலிவுட் சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.
இதன்மூலம் தற்போது ராஜமவுலிக்கு போட்டியில்லாமல் தாதா சாகேப் பால்கே படத்தை உருவாக்க வாய்ப்பு வந்துள்ளது என்கிறார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!