
மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு
நீண்ட நாட்களாக ஜோத்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கில் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து சல்மான்கான் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதனால் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த வழக்கு மீண்டும் தூசு தட்டப்பட்டு இருக்கிறது. அடுத்த மாதம் (செப்டம்பர்) 22ம் தேதி இந்த வழக்கு ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
இந்த வழக்கு சில மாதங்களில் முடிந்துவிடும் என்றும் சல்மான்கானுக்கு விதிக்கப்பட்ட தண்டணை குறைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ஏற்கெனவே உடல்நலக்குறைவு, கொலை மிரட்டல் பிரச்னைகளுக்கு இடையில் இந்த வழக்கு சல்மானுக்கு மேலும் ஒரு பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!