
மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான்
இது குறித்து அவர் பேசும்போது, “என் முதல் மனைவி ரீனா தத்தா என்னை விட்டு பிரிவதாக கூறி வெளியேறிய அன்று ஒரு பாட்டில் மது அருந்தினேன். அதன்பிறகு வந்த ஒன்றரை வருடங்களில் தினசரி குடித்தேன். என்னால் தூங்கவே முடியவில்லை. அதிக மது குடித்ததால் சுயநினைவை இழந்தேன். என்னை நானே உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சி செய்தேன்” என்றும் மனம் திறந்து கூறியுள்ளார்.
அவரது முதல் மனைவி ரீனா தத்தாவுடனான வாழ்க்கை பதினாறு வருடங்களுக்கு பிறகு விவாகரத்தில் முடிந்தது. அதைத் தொடர்ந்து 2005ல் கிரண் ராவ் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் அமீர்கான். அவரையும் கிட்டத்தட்ட 16 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு 2021ல் விவாகரத்து செய்தார் அமீர்கான். தற்போது தனது நீண்டநாள் தோழியான கவுரி ஷிண்டேவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருகிறார் அமீர்கான்.. ஆனாலும் தனது முதல் இரண்டு மனைவிகளுடனும் இணக்கமான உறவை பேணி வருகிறார் அமீர்கான்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!