
சூப்பர் ஹீரோ படத்திற்காக லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்க்கும் அமீர்கான்
அடுத்ததாக நீண்ட நாள் காத்திருக்கும் கைதி 2 படத்தின் படப்பிடிப்பை லோகேஷ் கனகராஜ் துவங்க இருக்கிறார் என்றும் சொல்லப்பட்டு வருகிறது. இன்னொரு பக்கம் கமலும் விக்ரம் 2வுக்காக காத்திருக்கிறார் என்றும் ஒரு தகவல் இருக்கிறது. அதே சமயம் கூலி படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அமீர்கானை அழைத்து வந்து நடிக்க வைத்துள்ளார் லோகேஷ் கனகராஜ். தற்போது அமீர்கான் நடிப்பில் வரும் ஜூன் 20ஆம் தேதி பாலிவுட்டில் சித்தாரே ஜமீன் பர் என்கிற திரைப்படம் வெளியாக இருக்கிறது.
இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் அமீர்கான் பேசும்போது, “நானும், லோகேஷ் கனகராஜும் ஒரு சூப்பர் ஹீரோ படத்திற்காக ஒன்றிணைந்து வேலை பார்த்து வருகிறோம். அது மிகப் பிரமாண்ட அளவில் உருவாகும் ஆக்ஷன் படமாக இருக்கும். அடுத்த வருடம் ஜூன் மாதத்திற்கு பிறகு அதன் படப்பிடிப்பு துவங்கும்” இன்று வெளிப்படையாகவே ஒரு தகவலை கூறியுள்ளார்.
அது மட்டுமல்ல 2014ல் பிரபல இயக்குனர் ராஜ்குமார் ஹிராணி இயக்கத்தில் அவர் நடிப்பில் வெளியான பிகே படத்தின் இரண்டாம் பாகத்தில அவர் நடிப்பதாக சொல்லப்பட்டு வந்த செய்தி குறித்து அவர் கூறும்போது, “அந்த செய்தியில் உண்மையில்லை. பிகேவுக்கு இரண்டாம் பாகம் எடுக்கப்படவில்லை. அதேசமயம் ராஜ்குமார் ஹிராணி இயக்கத்தில் இந்திய சினிமாவின் தந்தையான தாதா சாஹேப் பால்கேவின் சுயசரிதை படத்தில் நான் நடிக்க இருக்கிறேன்” என்றும் கூறியுள்ளார் அமீர்கான்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!