
போலீஸ் பாதுகாப்பை மீறி சல்மான் கான் வீட்டுக்கு செல்ல முயன்ற பெண் கைது
இது நடந்த இரண்டு நாட்களே ஆனா நிலையில் நேற்று 32 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அபார்ட்மெண்ட்டிற்குள் உள்ளே நுழைந்து சல்மான் கான் வசிக்கும் பிளாட்டிற்கு செல்லும் லிப்டிலும் ஏறி போலீஸ் பாதுகாப்பை மீறி அங்கே செல்ல முயற்சித்து இருக்கிறார். அப்போது அங்கிருந்த பாதுகாப்பு போலீசார் அவர் அத்துமீறி நுழைந்ததாக கூறி அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். அதே சமயம் அந்த பெண், “சல்மான் கானை ஆறு மாதத்திற்கு முன்பு ஒரு பார்ட்டியில் நான் சந்தித்தேன். அவரது அழைப்பின் பேரில் தான் அவரை நான் பார்க்க வந்தேன்” என்று கூறினாலும் கூட சல்மான்கான் வீட்டினர் அப்படி யாருக்கும் நாங்கள் அழைப்பு கொடுக்கவில்லை என்று அந்த தகவலை மறுத்துள்ளனர். இப்படி அடுத்தடுத்து சில நபர்கள் சல்மான் கானை பார்ப்பதாக கூறிக்கொண்டு பாதுகாப்பை மீறி உள்ளே நுழைவதை பார்த்து சல்மான் கானின் பாதுகாப்பை போலீசார் இன்னும் பலப்படுத்த வேண்டும் என ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!