
பூல் புலையா 3 : போட்டி நடனத்தில் மிரட்டும் மாதுரி தீட்சித் - வித்யா பாலன்
இந்தப் படத்தை அனீஸ் பஸ்மி என்பவர் இயக்கியிருந்தார். நடிகை தபு இரட்டை வேடங்களில் நடித்திருந்த இந்த படத்தில் இன்னொரு கதாநாயகியாக கியாரா அத்வானி நடித்திருந்தார். கதாநாயகனாக கார்த்திக் ஆர்யன் நடித்திருந்தார். இந்த படமும் வெற்றி படமாக அமைந்த நிலையில் தற்போது இந்த படத்தின் மூன்றாம் பாகமாக பூல் புலையா-3 உருவாகியுள்ளது. இந்தப்படத்தையும் அனீஸ் பஸ்மியே இயக்கியுள்ளார்.
முதல் பாகத்தில் இடம்பெற்ற வித்யா பாலன் இந்த மூன்றாம் பாகத்திலும் தற்போது நடித்துள்ளார். மேலும் எண்பது 90களில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம்வந்த மாதிரி தீட்சித்தும் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இரண்டாம் பாகத்தில் கதாநாயகனாக நடித்த அதே கார்த்திக் ஆர்யன் தான் இதிலும் நடித்துள்ளார்.
சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியானது. வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் இடம்பெற்ற வைஜெயந்தி மாலா, பத்மினி போட்டி நடன பாணியில் இதில் மாதிரி தீட்சித், வித்யா பாலன் இருவருமே இணைந்து ஆடும் அரசவை போட்டி நடன பாடல் ஒன்று இடம் பெற்றுள்ளது. அதேபோல இந்த இருவருமே பேய் உருவங்களில் இணைந்து கதாநாயகனை மிரட்டும் காட்சிகளும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. தீபாவளியை முன்னிட்டு நவ., 1ல் இந்த படம் வெளியாக இருக்கிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!