
3 காட்சிகள் நீக்கத்துடன் எமர்ஜென்சிக்கு யுஏ சான்றிதழ்
கடந்த செப்டம்பர் 6ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது . ஆனால் அன்றைய தினம் படம் வெளியாகவில்லை. தணிக்கை குழுவினர் சான்றிதழ் வழங்காததால் படத்தை வெளியிட முடியவில்லை.
இந்நிலையில் தற்போது மும்பை தணிக்கை குழுவினர் "யுஏ" சான்றிதழை வழங்கி உள்ளனர். இந்தியப் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் இடம்பெற்றிருந்த வசனங்கள், பாகிஸ்தான் வீரர்கள் வங்கதேச அகதிகளைத் தாக்குவது மாதிரியான காட்சிகள், ஆபரேஷன் "ப்ளூஸ்டார்" பற்றிய உண்மையான புகைப்படங்கள் இடம்பெற்றிருப்பது போன்ற 10 காட்சிகளை மாற்ற வேண்டும். மற்றும் மூன்று காட்சிகளை நீக்க வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில் யு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!