
கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யாவை பிரிந்த நடிகை நடாஷா
கடந்த சில மாதங்களாக இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் இவரும் பிரிவதை வெளிப்படையாக அறிவித்துள்ளனர். ஹர்திக் பாண்ட்யா - நடாஷா இருவரும் இணைந்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவில், “இது கடினமான முடிவு தான் என்றாலும் இருவரின் நலன் கருதி பரஸ்பர அடிப்படையில் நாங்கள் பிரிகிறோம். எங்களது மகன் இருவரது பராமரிப்பில் இருப்பார். அவனது மகிழ்ச்சிக்காக எல்லாவற்றையும் செய்வோம். எங்களது தனிப்பட்ட வாழ்க்கைக்கு அனைவரும் மதிப்பு அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்” என்று குறிப்பட்டுள்ளனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!