
யுனிசெப் தூதராக கரீனா கபூர் நியமனம்
இதுகுறித்து கரீனா கபூர் கூறும்போது, “இந்த பொறுப்பை மிகுந்த கவுரவம் மற்றும் மிகுந்த பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன். கடந்த 10 ஆண்டுகளாக மிகவும் பொறுமையுடன், மனநிறைவாக வேலை செய்திருக்கிறேன். இதையடுத்து ஐ.நா சர்வதேச குழந்தைகள் நிதியத்தின் தேசிய தூதராக நியமிக்கப்பட்டுள்ளேன். இதனால் எனது பொறுப்பு மேலும் அதிகரித்துள்ளது.
இந்த பொறுப்பை முழுமனதுடன் ஏற்றுக்கொண்டு, இந்தியாவின் எந்த பகுதியில் எந்த குழந்தை பாதிக்கப்பட்டாலும், அது ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், பேசக்கூடிய குழந்தையாக இருந்தாலும், அல்லது மாற்றுத்திறனாளியாக இருந்தாலும், அனைத்து குழந்தைக்கும் அவர்களது அடிப்படை உரிமை கிடைப்பதற்காக பாடுபடுவேன்” என்கிறார் கரீனா கபூர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!