
திடீர் திருப்பம் : சுகேஷ் மீது ஜாக்குலின் கொலை மிரட்டல் புகார்
இந்த வழக்கை அமலாக்கத் துறை விசாரித்து வந்த நிலையில், சிறைக்குள் இருந்து கொண்டே ஜாக்குலினுக்கு அவ்வப்போது சுகேஷ் காதல் கடிதங்களை எழுதி பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். ஜாக்குலினும் “நான் அவரோடு நெருக்கமாக இருந்தது உண்மைதான். அவர் மோசடி பேர்வழி என்பது தெரியாது. அவரிடம் பரிசு பொருட்கள்தான் வாங்கி இருக்கிறேன் பணம் வாங்கவில்லை” என்று கூறி வந்தார்.
இந்த நிலையில் டில்லி போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோராவுக்கு ஜாக்குலின் ஒரு புகார் மெயில் அனுப்பி உள்ளார். அதில், “சிறையில் இருந்து கொண்டே சுகேஷ் என்னை மிரட்டுகிறார். கோர்ட்டில் உண்மையை சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார். இதனால் என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. வெளிப்படையாக என்னை மிரட்டும் சுகேஷூக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். அதோடு அவர் எழுதும் கடிதங்கள், எனது தனிப்பட்ட உரிமைகளை பாதிக்கிறது. அதையும் தடுத்து நிறுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!