
பாபி சிம்ஹா பட விழாவில் நேரில் கலந்து கொண்டு வாழ்த்திய கங்கனா
இந்த படத்தை யாத சத்யநாராயணா என்பவர் இயக்கி உள்ளார். படத்தில் மகரந் தேஷ்பாண்டே, ராஜ் அருண் ஆகியோருடன் நடிகர் பாபி சிம்ஹாவும் மிக முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். கதாநாயகிகளாக வேதிகா மற்றும் அனுஸ்ரீரியா திரிபாதி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நிகழ்ச்சி சமீபத்தில் மும்பையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் கலந்து கொண்டார்.
இதில் கலந்து கொண்டது குறித்து கங்கனா கூறும்போது, “நான் இந்த விழாவில் எதற்காக கலந்து கொண்டேன் என உங்கள் அனைவருக்கும் தெரியும். சர்தார் வல்லபாய் பட்டேலின் தீவிர அபிமானி நான். படக்குழுவினரின் அர்ப்பணிப்பையும் உழைப்பையும் பார்க்கும்போது நிச்சயமாக ஒரு அற்புதமான திரை அனுபவம் இந்த படத்தின் மூலம் கிடைக்கும் என தெரிகிறது” என பாராட்டி உள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!