
முன்னாபாய் எம்பிபிஎஸ் பார்ட் 3 உருவாகுமா? ராஜ்குமார் ஹிரானி தகவல்
இதையடுத்து கடந்த 15 வருடங்களாக முன்னாபாய் படத்தின் மூன்றாம் பாகம் எப்போது உருவாகும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வருகிறது. இந்தநிலையில் ராஜ்குமார் ஹிரானியின் இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த டங்கி திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தின் புரமோஷனுக்காக ராஜ்குமார் ஹிரானி செல்லும் இடங்களில் எல்லாம் முன்னாபாய் எம்பிபிஎஸ் படத்தின் மூன்றாம் பாகம் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி கூறும்போது, “சஞ்சய் தத்தும் நானும் இது பற்றி பேசினோம். மூன்றாம் பாகத்தை உருவாக்குங்கள் என சஞ்சய் தத் கேட்டுக்கொண்டார். டங்கி இப்போது தான் வெளியாகி இருக்கிறது. இனிமேல் தான் இந்த மூன்றாம் பாகத்தை பற்றி யோசிக்க வேண்டும். இந்த மூன்றாம் பாகம் உருவாக்குவதில் இருக்கும் மிகப்பெரிய கஷ்டமே ஏற்கனவே இதன் முந்தைய இரண்டு பாகங்களும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதுதான்.
இந்த மூன்றாம் பாகத்திற்காக இதுவரை ஐந்து கதைகள் எழுதி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன. காரணம் பல கதைகள் மிகவும் பழைய பாணியில் இருந்தது தான். ஒருவேளை முதல் இரண்டு படங்களையும் சமன் செய்யும் விதமாக கதை உருவாகாவிட்டால் மூன்றாம் பாகத்தை நான் இயக்குவது சாத்தியமில்லை என்றே நினைக்கிறேன். தற்போதும் இதற்கான ஒரு கதை என்னிடம் இருக்கிறது. மற்றபடி காலம் தான் பதில் சொல்ல வேண்டும்” என்று கூறியுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!