
சினிமா திருட்டை தடுக்க மத்திய அரசு அதிரடி : 12 தனி அதிகாரிகள் நியமனம்
தற்போது இதனை தீவிரமாக கண்காணிக்கவும், தீவிரப்படுத்தவும் 12 கண்காணிப்பு அதிகாரிகளை மத்திய அரசு நியமித்துள்ளது. இது குறித்து தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் கூறியிருப்பதாவது: யூ-டியூப், டெலிகிராம், இணையம் மற்றும் ஆன்லைன் தளங்களில் தங்கள் சினிமா திருட்டுத்தனமாக ஒளிபரப்பாவதை தயாரிப்பாளர் புகார் செய்தால் 48 மணி நேரத்தில் கண்காணிப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள். அவ்வாறு படத்தை திருட்டுத்தனமாக ஒளிபரப்பு செய்தவர்களுக்கு 3 மாதம் முதல் 3 ஆண்டு வரை சிறையும், 3 லட்சம் முதல் படத்தின் தயாரிப்பு செலவில் 5 சதவீத தொகை வரையும் அபராதம் விதிக்கப்படும். என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!