
நடிகர் அனுபம் கெர்-க்கு கை கொடுத்து தூக்கிவிட்டு கம்பி எண்ண வைத்த போலீஸ்
சில வருடங்களுக்கு முன்பு வீடியோ கேசட்டுகள் நடைமுறையில் இருந்த சமயத்தில் தனக்கு வேண்டிய பலருக்கு அதை கொண்டு சென்று கொடுத்து வந்தாராம் அனுபம் கெர். அப்படி ஒரு முறை ஒருவருக்காக அந்த வீடியோ கேசட்டுகளை கொண்டு செல்லும்போது நேரமாகி விட்டதே என்பதால் ரயில் நிலையத்தில் உள்ள தண்டவாளத்தை மேம்பாலம் வழியாக கடக்காமல் குறுக்கு வழியில் கடந்துள்ளார். அப்போது எதிர் பிளாட்பார்மில் இருந்த ஒருவர் இவருக்கு கை கொடுத்து மேலே தூக்கி விட்டு உதவி செய்துள்ளார்.
ஆனால் பிளாட்பார்ம் மேலே ஏறிய பின்னரும் தனது கையை விடாமல் இன்னும் இறுகப்பற்றி கொண்டாராம் அந்த நபர். பின்னர் தான் தெரியவந்தது அவர் ஒரு ரயில்வே போலீஸ் அதிகாரி என்பது. இப்படி விதியை மீறி பாதையை கடப்பவர்களை பிடிப்பதற்காகவே அங்கே மப்டியில் நிற்பாராம் அந்த அதிகாரி. அப்படி கடந்ததற்கு தண்டனையாக தன்னை அன்றைய இரவு முழுவதும் லாக்கப்பில் வைத்து விட்டு மறுநாள் காலையில் தான் அனுப்பியதாக கூறியுள்ளார் அனுபம் கெர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!