
ஆன்லைன் ரம்மி : ஷாரூக்கானுக்கு எதிராக போராட்டம்
இந்த அமைப்பின் தலைவர் கிருஷ்ண சந்திரா அடல் என்பவர் மீடியாக்களிடம் கூறுகையில், இன்றைக்கு இளைய தலைமுறையினர் ஆன்லைன் ரம்மியை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் ஏராளமான பணத்தை இழக்கிறார்கள். சிலர் பணத்தை இழந்த விரக்தியில் தற்கொலை முயற்சியிலும் ஈடுபடுகிறார்கள். ஆனால் அப்படிப்பட்ட ஆன்லைன் ரம்மி செயலியை சினிமா பிரபலங்கள் விளம்பரப்படுத்துவதால் அது போன்ற விளையாட்டுகளில் அதிகமான இளைஞர்கள் மூழ்கி போகிறார்கள். அதன் காரணமாகவே ஆன்லைன் ரம்மி செயலியை விளம்பரப்படுத்துவதில் ஷாருக்கான் போன்ற பிரபலங்கள் ஈடுபடக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டத்தை நடத்தி உள்ளோம் என்று தெரிவித்திருக்கிறார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!