
100 கோடி கேட்டு முன்னாள் மனைவி மற்றும் சகோதரர் மீது அவமதிப்பு வழக்கு தொடர்ந்த நவாசுதீன் சித்திக்
அது மட்டுமல்ல அவரது முன்னாள் மனைவி ஆலியாவை தனக்கு சொந்தமான வீட்டிற்குள் நுழையக்கூடாது என அவர் தடை உத்தரவு போட்டதும், அதனால் அவரது குழந்தைகளுடன் வீட்டு வாசலிலேயே நின்றிருந்த நிகழ்வும் பாலிவுட்டை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மேலும் நவாசுதீன் சித்திக்கின் அண்ணன் சம்சுதீன் சித்திக் தொடர்ந்து தனது சகோதரர் பற்றிய குறைகளை அவ்வப்போது பேட்டிகளில் கூறி வந்தார்.
இந்த நிலையில் தனது முன்னாள் மனைவி மற்றும் தனது சகோதரர் தனக்கு எதிரான தகவல்களை பொது வெளியில் பேசி வருவதன் மூலம் தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக நடந்து கொள்வதாக கூறி இருவர் மீதும் 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்து உள்ளார் நவாசுதீன் சித்திக். இந்த வழக்கு வரும் மார்ச் 30ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!