
செல்பி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை தூக்கி எறிந்த ரன்பீர் கபூர்
அந்த வீடியோவில் ஒரு இளைஞர் நடந்துவரும் ரன்வீர் கபூருடன் செல்பி எடுக்க முயற்சிக்கிறார். அதற்கு ரன்பீர் கபூரும் சிரித்த முகத்துடன் போஸ் கொடுக்கிறார். அதே சமயம் செல்பி எடுக்க அந்த இளைஞர் தடுமாறுவதால் ஏற்படும் தாமதம் காரணமாக அருகில் இருந்தோர் அவரை விலகி நிற்கும்படி சத்தம் போடுகின்றனர்.. அமைதியாக அந்த நபரிடம் செல்போனை ரன்பீர் கபூர் கேட்க அந்த இளைஞனும் கொடுக்கிறார். ஒருவேளை அந்த இளைஞனுடன் செல்பி எடுக்க அவரே உதவி செய்கிறாரோ என நினைத்தால் படக்கென செல்போனை பின்பக்கமாக தூக்கி எறிகிறார்.
இந்த வீடியோ வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி பரவி வரும் நிலையில் நெட்டிசன்கள் பலரும் ரன்பீர் கபூரின் இந்த செயலை கண்டித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இன்னும் சிலரோ இது ஒரு பிராங்க் வீடியோ என்று ரன்பீர் கபூருக்கு ஆதரவாக கருத்துக்களை கூறி வருகின்றனர். அதேசமயம் எப்போதுமே ரன்பீர் கபூர் பொதுவெளியில் வரும்போது தன்னை போட்டோ எடுக்கும் புகைப்படக் கலைஞர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் ரொம்பவே கூலாகவே டீல் பண்ணுவார் என்பதால் இந்த வீடியோ அவர் நடித்துவரும் விளம்பர படத்திற்கான புரமோஷனுக்காக எடுக்கப்பட்டதாக கூட இருக்கலாம் என்றும் சிலர் கருத்து கூறி வருகின்றனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!