
அமிதாப்பச்சன் பெயர் புகைப்படத்தை பயன்படுத்த கோர்ட் தடை
இந்த நிலையில் அமிதாப் பச்சன் சார்பில் அவரது வழக்கறிஞர்கள் ஹரீஷ் சால்வே, பிரவீன் ஆனந்த் ஆகியோர் டில்லி உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், அமிதாப் பச்சன் பெயரைப் பயன்படுத்தி, லாட்டரி சீட்டு நடைபெறுகிறது. போலியாக குரோர்பதி நிகழ்ச்சியை நடத்துகின்றனர். உடைகள், சுவரொட்டிகளில் அவர் புகைப்படங்களைப் பயன்படுத்துகின்றனர். அமிதாப் பச்சன் வீடியோ கால் என்ற போலி மொபைல் ஆப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே அமிதாப் பச்சன் பெயர், புகைப்படம், குரல் ஆகியவற்றை வணிக நோக்கத்துக்காக பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
இதனை விசாரித்த நீதிபதி நவீன் சாவ்லா அமிதாப் பச்சன் அனுமதியின்றி அவர் பெயர், குரல், புகைப்படங்களைப் பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!