
நடிகை சோனாலி போகத்தின் மர்ம மரணம் : திடுக்கிடும் தகவல்
இந்த நிலையில் தற்போது சோனாலி போகத்தின் மரணம் குறித்து 1000 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கையை கோவா நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையில், நடிகை சோனாலி போகத்தின் உதவியாளரும், நண்பரும் சேர்ந்து தண்ணீரில் அவருக்கு போதை பொருளை கலந்து கொடுத்ததாக கூறப்பட்டிருக்கிறது. அதனால் அவரது உதவியாளர் சுதீர் சங்கரன் மற்றும் சுக்வீந்தர் சிங் இருவரும் இந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். அதுமட்டுமின்றி அவர்கள் சோனாலி போகத்திற்கு தண்ணீரில் போதை பொருள் கலந்து கொடுக்கும் சிசிடிவி காட்சிகளையும் நீதிமன்றத்திற்கு ஆதாரமாக காவல்துறை கொடுத்துள்ளது. இந்த வழக்கு குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!