
இளைய தலைமுறையின் மனதை கெடுக்கிறீர்கள் : ஏக்தா கபூருக்கு நீதிமன்றம் கண்டனம்
இதுபற்றி நீதிபதிகள் கருத்து தெரிவித்தபோது, “ஏதாவது செய்தே ஆக வேண்டும்.. நீங்கள் நாட்டிலுள்ள இளைய தலைமுறையின் மனதைக் கெடுக்கும் வேலையில் இறங்கியுள்ளீர்கள். இன்று ஓடிடி தளத்தில் எல்லாமே கிடைக்கிறது. நீங்கள் எந்தவிதமான சாய்ஸை மக்களுக்கு கொடுத்துக்கொண்டு இருக்கிறீர்கள்.? இளைஞர்களின் மனதை கெடுக்கும் வேலையைத்தான் செய்துகொண்டு இருக்கிறீர்கள்” என்ற தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர்.
மேலும் ஏக்தா கபூருக்கு ஆதரவாக ஆஜரான வழக்கறிஞறிடம், “ஒவ்வொரு முறையும் அவருடைய இதுபோன்ற வழக்குகளுக்காக நீங்கள் இங்கே வருகிறீர்கள்.. இதை நாங்கள் பாராட்ட முடியாது. இந்த நீதிமன்றம் வலிமையானவர்களுக்கானது அல்ல.. குரல் கொடுக்க முடியாத எளியவர்களுக்கானது. நீங்கள் இனி இதுபோன்று ஒரு பெட்டிஷன் கொண்டு வந்தால், அதற்கு நாங்கள் நிச்சயமாக ஒரு விலை வைக்க நேரிடும். இதை தயவுசெய்து உங்களுடைய கிளையன்ட்டிடம் தெரியப்படுத்துங்கள்” என்றும் கடுமை காட்டியுள்ளனர்.
அதுமட்டுமல்ல பீகாரில் உள்ள பெகுசராயில் உள்ள கீழமை நீதிமன்றம் ஒன்றில் இதே காரணத்திற்காக ஏக்தா கபூர் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் அவருக்கு வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!