
முன்னாபாய் எம்பிபிஎஸ்-3க்கு வாய்ப்பில்லை : அர்ஷத் வர்ஷி
இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் 2வது பாகமாக லஹே ரகோ முன்னாபாய் படத்தை இயக்கினார் ராஜ்குமார் ஹிரானி. இந்தப்படமும் முதல் பாகத்தை போலவே சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதுடன் தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் ரீமேக் செய்து அங்கேயும் பெரும் வெற்றி பெற்றது.
கடந்த பத்து வருடங்கலுக்கு மேலாக முன்னாபாய் படத்தின் மூன்றாம் பாகம் எப்போது என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வருகிறது. கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு கூட இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி, முன்னாபாய்" படத்தின் மூன்றாம் பாக வேலைகளை துவங்கிவிட்டதாக அறிவித்தார்.. ஆனால் அது அறிவிப்பாகவே நிற்கிறது.
இந்த நிலையில் அந்த இரண்டு பாகங்களிலும் சஞ்சய் தத்தின் வலதுகையாக (தமிழில் பிரபு நடித்திருந்தார்) கூடவே பயணிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் அர்ஷத் வர்ஷி முன்னாபாய் மூன்றாம் பாகத்துக்கு இனி வாய்ப்பில்லை என்று ஒரு அதிர்ச்சி தகவலை கூறி உள்ளார்.. எல்லோரையும் போல படத்தில் நடித்த தானும் மற்ற சில முக்கிய நடிகர்களும் பத்து வருடங்களுக்கு மேலாக மூன்றாம் பாகத்திற்காக எதிர்பார்த்து சோர்ந்துபோய் விட்டதாகவும் இனிமேலும் மூன்றாம் பாகம் நிகழ வாய்ப்பில்லை என்றும் சமீபத்திய பெட்டி ஒன்றில் கூறியுள்ளார்..

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!