
கரண் ஜோஹரை மீண்டும் சீண்டிய கங்கனா
அந்தவகையில் தற்போது கங்கனா ரணவத் ஓடிடி தளத்தில் லாக்கப் என்கிற ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கினார். அந்த நிகழ்ச்சி கிட்டத்தட்ட 19 நாட்களுக்குள்ளேயே 200 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது. இந்த சந்தோசத்தை பகிர்ந்து கொண்ட கங்கனா, இதன்பிறகு கூறியதுதான் மறைமுகமாக கரண் ஜோஹரை கிண்டலடிப்பது போல அமைந்துள்ளது..
இதுபற்றி பதிவிட்டுள்ள கங்கனா, “இந்த 20௦ மில்லியன் பார்வைகள் என்கிற வெற்றியை ஒரு குறிப்பிட்ட சிலரால் ஜீரணிக்க முடியாது.. அந்த கூட்டத்தை வழிநடத்தும் "பப்பா ஜோ" இந்நேரம் கண்ணீர் விட்டு கதறி கொண்டிருப்பார்.. இந்த நிகழ்ச்சியை தடுப்பதற்கு எத்தனையோ வழிகளை கையாண்டார்கள்.. இப்போது 200 மில்லியன் பார்வைகளை கடந்துவிட்ட நிலையில் இனி அடுத்து என்ன திட்டம் தீட்டுகிறார்கள் என பார்ப்போம்.. உங்களுக்கு அழுவதற்கு இங்கே இன்னும் நிறைய நாட்கள் இருக்கின்றன "பப்பா ஜோ" என்று அதில் கூறியுள்ளார் கங்கனா ரணவத். பப்பா ஜோ என்பது கரண் ஜோஹரைத்தான் குறிக்கிறது என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!