
ஷாருக்கான் மானேஜருக்கு மீண்டும் சம்மன் அனுப்ப போலீஸ் முடிவு
நவ 11, 2021
Advertisement
நடுக்கடலில் சொகுசு கப்பலில் போதை விருந்தில் கலந்து கொண்ட ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 20 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ஆர்யன் கான் தற்போது ஜாமீனில் விடுதலை ஆகியுள்ளார். இந்த வழக்கில் ஷாருக்கானின் மானேஜர் பூஜா தத்லானியும் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்த கடந்த புதன் கிழமை (நேற்று) ஆஜராகுமாறு போதை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் நேற்று அவர் ஆஜராகவில்லை. தனக்கு உடல்நலம் சரியில்லை என்று தனது வழக்கறிஞர் மூலம் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கில் பூஜாவின் சாட்சியம் மிகவும் முக்கியமானது. அதனால் அவரை விசாரணையில் இருந்து விடுவிக்கும் பேச்சுக்கே இடமில்லை. உரிய அவகாசம் வழங்கி அவருக்கு மீண்டும் சம்மன் அனுப்பபடும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்த கடந்த புதன் கிழமை (நேற்று) ஆஜராகுமாறு போதை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் நேற்று அவர் ஆஜராகவில்லை. தனக்கு உடல்நலம் சரியில்லை என்று தனது வழக்கறிஞர் மூலம் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கில் பூஜாவின் சாட்சியம் மிகவும் முக்கியமானது. அதனால் அவரை விசாரணையில் இருந்து விடுவிக்கும் பேச்சுக்கே இடமில்லை. உரிய அவகாசம் வழங்கி அவருக்கு மீண்டும் சம்மன் அனுப்பபடும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!