
எதிர்ப்புக்கு பணிந்தார்: படத்தின் தலைப்பை மாற்றிய அக்ஷய் குமார்
இந்த படம் இந்தியாவை ஆக்ரமித்த முகலாய மன்னர்களை எதிர்த்து போராடி இந்துஸ்தானி சாம்ராஜ்யத்தை உருவாக்கிய மன்னர் பிருத்விராஜின் வரலாற்ற கதை. இந்த படத்திற்கு பிருத்விராஜ் என்று மொட்டையாக பெயர் வைக்க கூடாது. சாம்ராட் பிருத்விராஜ் சவுகான் என்று வைக்க வேண்டும் என்று பல இந்து அமைப்புகள் கூறின. தலைப்பை மாற்றாவிட்டால் படத்தை திரையிட விட மாட்டோம் என்றனர்.
இந்த கடுமையான எதிர்ப்புக்கு பிறகு படத்தின் தலைப்பை சாம்ராட் பிருத்விராஜ் என்று மாற்றி இருக்கிறார்கள். அதோடு இந்து மகாராஜாவின் வெற்றிக் கதை என்கிற டேக் லைனையும் இணைத்துள்ளனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!