
கங்கனாவின் பாராட்டுக்களை புறக்கணித்த ஜாவேத் அக்தர்
பாகிஸ்தானுக்கு சென்று அங்கேயே" அவர்களின் செயல் பற்றி ஜாவேத் அக்தர் இப்படி கடுமையாக பேசியதற்கு இங்குள்ள பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்தனர். அந்த வகையில் துணிச்சலான கருத்துக்களை கூறிவரும் பாலிவுட் நடிகை கங்கனா ரணவத்தும், சரியான மற்றும் துனுச்சலான பேச்சு என்று கூறி தனது பாராட்டுகளை ஜாவேத் அக்தருக்கு தெரிவித்திருந்தார். ஆனால் இதுபற்றி ஒரு நிகழ்ச்சியில் ஜாவேத் அக்தரிடம் கேட்கப்பட்டபோது, கங்கனாவின் பாராட்டுக்கள் எனக்கு தேவையில்லை என்றும் அவரது பேச்சுக்கு நான் முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்றும் அவரது பாராட்டுக்களை புறக்கணித்து ஆச்சரியப்படுத்தினார்.
அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை. கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கங்கனா, பாடகர் ஜாவேத் அக்தர் மீது பொய்யான சில விஷயங்களை கூறினார் என்று அவர் மீது நீதிமன்றத்தில் ஜாவேத் அக்தர் தொடர்ந்த வழக்கு இப்போதும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அப்படி கீரியும் பாம்புமாக இருவரும் இருக்கும் நிலையில் கங்கனாவின் பாராட்டுகளை ஜாவேத் அக்தர் புறக்கணித்ததில் ஆச்சரியம் எதுவும் இல்லை.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!