
500 பேருடன் வந்து விடை கொடுத்த ரஜினி : நெகிழ்ந்து போன ஜாக்கி ஷெராப்
“படப்பிடிப்பில் ரஜினியுடன் இணைந்து பணியாற்றியபோது, இத்தனை வருடங்களில் அவர் கொஞ்சமும் மாறவில்லை என்பதை முதல் நாளிலேயே தெரிந்து கொண்டேன். ஜெயிலர் படத்தில் எனது கடைசி நாள் படப்பிடிப்பின்போது எனக்கு முன்னதாக படப்பிடிப்பை முடித்து வீட்டிற்கு கிளம்புவதற்காக காரில் ஏறினார் ரஜினிகாந்த். அதன்பிறகு எனக்கு அன்றுடன் படப்பிடிப்பு முடிவடைகிறது என்பதை தெரிந்து கொண்டதும் உடனே காரில் இருந்து இறங்கி பிரியா விடை கொடுப்பதற்காக என்னை நோக்கி வந்தார்.
அவர் மட்டுமல்ல அவருடன் சேர்ந்து படப்பிடிப்பில் இருந்த சுமார் 500 பேர் அவருடன் சேர்ந்து வந்து எனக்கு பிரியாவிடை கொடுத்தனர். எனக்கு விடை கொடுப்பதற்காகவே திரும்பி வந்த அவரது பெருந்தன்மையை பார்த்து ஸ்தம்பித்து போய்விட்டேன்” என்று நெகிழ்ந்து போய் கூறியுள்ளார் ஜாக்கி ஷெராப்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!