
அமிதாப்பச்சன் பெயர் புகைப்படத்தை பயன்படுத்த கோர்ட் தடை
நவ 26, 2022
Advertisement
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் இந்திய சினிமாவின் அடையாளமாக பார்க்கப்படுகிறார். அவரது குரலில் பல விளம்பரங்கள் வெளிவந்துள்ளது. அவர் நடத்துவது போன்ற பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. பல விளம்பரங்களில் அவரது அனுமதி இன்றி அவரது படம் பயன்படுத்தப்படுகிறது. அவர் பெயரில் நூற்றுக் கணக்கான இணைய தளங்கள் இருக்கிறது.
இந்த நிலையில் அமிதாப் பச்சன் சார்பில் அவரது வழக்கறிஞர்கள் ஹரீஷ் சால்வே, பிரவீன் ஆனந்த் ஆகியோர் டில்லி உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், அமிதாப் பச்சன் பெயரைப் பயன்படுத்தி, லாட்டரி சீட்டு நடைபெறுகிறது. போலியாக குரோர்பதி நிகழ்ச்சியை நடத்துகின்றனர். உடைகள், சுவரொட்டிகளில் அவர் புகைப்படங்களைப் பயன்படுத்துகின்றனர். அமிதாப் பச்சன் வீடியோ கால் என்ற போலி மொபைல் ஆப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே அமிதாப் பச்சன் பெயர், புகைப்படம், குரல் ஆகியவற்றை வணிக நோக்கத்துக்காக பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
இதனை விசாரித்த நீதிபதி நவீன் சாவ்லா அமிதாப் பச்சன் அனுமதியின்றி அவர் பெயர், குரல், புகைப்படங்களைப் பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில் அமிதாப் பச்சன் சார்பில் அவரது வழக்கறிஞர்கள் ஹரீஷ் சால்வே, பிரவீன் ஆனந்த் ஆகியோர் டில்லி உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், அமிதாப் பச்சன் பெயரைப் பயன்படுத்தி, லாட்டரி சீட்டு நடைபெறுகிறது. போலியாக குரோர்பதி நிகழ்ச்சியை நடத்துகின்றனர். உடைகள், சுவரொட்டிகளில் அவர் புகைப்படங்களைப் பயன்படுத்துகின்றனர். அமிதாப் பச்சன் வீடியோ கால் என்ற போலி மொபைல் ஆப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே அமிதாப் பச்சன் பெயர், புகைப்படம், குரல் ஆகியவற்றை வணிக நோக்கத்துக்காக பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
இதனை விசாரித்த நீதிபதி நவீன் சாவ்லா அமிதாப் பச்சன் அனுமதியின்றி அவர் பெயர், குரல், புகைப்படங்களைப் பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டார்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!