
அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன்
பாலிவுட்டின் மூத்த நடிகரான அமிதாப்பச்சன் அயோத்தியின், சரயு நதிக்கரையில் "த சரயு என்கிளேவ்" என்ற இடத்தில் இடம் வாங்கியுள்ளாராம். ராமர் கோயிலில் இருந்து 15 நிமிடத் தொலைவிலும், அயோத்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து 30 நிமிடத் தொலைவிலும் அந்த இடம் அமைந்துள்ளதாம்.
இது மட்டுமல்லாமல் மும்பை, அலிபாக் பகுதியில் சுமார் 20 ஏக்கர் நிலத்தை 10 கோடிக்கு வாங்கியுள்ளார் என்றும் சொல்கிறார்கள். அந்த இடத்தில் சில நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் ஏற்கெனவே இடங்களை வாங்கியுள்ளார்களாம். அலிபாக் என்பது தீவுப் பகுதி. அங்கு அமிதாப் விரைவில் பார்ம் அவுஸ் ஒன்றை கட்டப் போகிறாராம்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!