
பாலிவுட் கவர்ச்சி நடிகை போதை பொருள் வழக்கில் கைது
கடந்த சில நாட்களுக்கு முன்பு மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தில் இகத்புரி மலை அருகே உள்ள சொகுசு பங்களாவில் ரகசியமாக போதை விருந்து நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அந்த பங்களாவில் அதிரடியாக சோதனை நடத்தினர். அங்கு அனுமதியின்றி பார்ட்டி நடத்தப்பட்டதும், போதைப் பொருள்கள் பயன்படுத்தப்பட்டதும் தெரிய வந்தது.
அதில் கலந்து கொண்ட 22 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஹீனா பாஞ்சலும் ஒருவர். "அந்த விருந்து நிகழ்ச்சியில் ஹீனா பாஞ்சல் தொழில்முறையில் நடனமாடவே சென்றார். அந்த பார்ட்டியில் அவர் பங்கேற்பாளரும் இல்லை. அவர் போதை மருந்து எதையும் உட்கொள்ளவில்லை" என்றும் ஹீனா பாஞ்சல் தரப்பு தெரிவிக்கிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!